ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு -11 பேருக்கு 5 நாள் போலீஸ் காவல்

by Staff / 11-07-2024 03:59:39pm
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு -11 பேருக்கு 5 நாள் போலீஸ் காவல்

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 11 பேரை, 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு எழும்பூர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பொன்னை பாலு, சந்தோஷ், மணிவண்ணன், திருவேங்கடம் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டு பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, இவர்களை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க செம்பியம் போலீஸார் மனுதாக்கல் செய்திருந்த நிலையில் எழும்பூர் நீதிமன்றம் 5 நாட்கள் அனுமதி கொடுத்துள்ளது.

 

Tags :

Share via