சிறுமி கூட்டு பலாத்காரம்: உயிருடன் எரித்துக் கொலை

by Staff / 03-08-2023 04:08:50pm
சிறுமி கூட்டு பலாத்காரம்: உயிருடன் எரித்துக் கொலை

ராஜஸ்தானின் பில்வாரா மாவட்டத்தில் 12 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு நிலக்கரி உலையில் உயிருடன் எரிக்கப்பட்டார். கோத்ரி நகரில் உள்ள நிலக்கரி உலையில் இருந்து சிறுமியின் உடல் மீட்கப்பட்டது. புதன்கிழமை பிற்பகல், சிறுமி ஆடு மேய்க்க வயலுக்குச் சென்று பின்னர் காணாமல் போனார். அப்பகுதியில் சிறுமியின் வளையல்கள் கிடப்பதை அப்பகுதி மக்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு நிலக்கரி உலையில் உயிருடன் எரிக்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். இதையடுத்து மோப்ப நாய் உதவியுடன் சிறுமியின் உடல் எரிந்த நிலையில் மீட்கப்பட்டது.

 

Tags :

Share via