கள்ளக்காதல் தொடர்பால் நண்பரை அடித்து கொலை செய்ய முயற்சி
பாண்டிச்சேரி ஆரோவில் அருகே மாமியாருடன் ஏற்பட்ட கள்ளத்தொடர்பால், நண்பரை அடித்து கொலை செய்ய முயற்சித்த இளைஞர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கவுதம் என்ற இளைஞரின் மாமியாரான சசிகலா (வயது 40) அதே பகுதியில் இரவு ஓட்டல் நடத்தி வருகிறார். சசிகலாவுக்கும் திருமணமாகாத கவுதம் நண்பன் கோபிக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதையறிந்த கவுதம், கோபியிடம் பலமுறை எச்சரித்துள்ளார். ஆனால், அவர்களின் கள்ளத்தொடர்பு நீடித்ததால், ஆத்திரமடைந்த கவுதம்,கோபியை அடித்து கொலை செய்ய முயற்சித்தது தெரிய வந்தது. பலத்த காயமடைந்த கோபிக்கு, மருத்துவமனயில் தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது.
Tags :