கேரளாவில் சுட்டெரிக்கும் வெயிலால் 4 வாக்காளர்கள் உயிரிழப்பு

by Staff / 26-04-2024 03:46:48pm
கேரளாவில் சுட்டெரிக்கும் வெயிலால் 4 வாக்காளர்கள் உயிரிழப்பு

கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இன்று அதிகபட்ச வெப்பநிலை பதிவாகி வருகிறது. இதனால், மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவையொட்டி, வாக்காளர்கள் அவசர அவசரமாக வாக்குச் சாவடிகளுக்கு வந்து செல்கின்றனர். கேரளாவில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. பாலக்காடு, மலப்புரம் மற்றும் ஆலப்புழா தொகுதிகளில் 3 வாக்காளர்கள் உயிரிழந்துள்ளனர். கோழிக்கோட்டில் வாக்குச்சாவடி முகவர் ஒருவர் உயிரிழந்தார். பெங்களூரிலும் வெப்ப அலை போன்ற சூழல் நிலவி வருகிறது.

 

Tags :

Share via
Logo