தொழில் போட்டி பிரபல ரவுடி வெட்டி கொலை .

by Staff / 09-05-2022 12:50:51pm
 தொழில் போட்டி பிரபல ரவுடி வெட்டி கொலை .

 
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த வேண்பாக்கம் பள்ளத்தை சேர்ந்தவர் பிரபல ரவுடியான ஜவகர். இவர் மீது பல்வேறு கொலைவழக்குகள்  கஞ்சா வழக்குகள் பல்வேறு குற்ற வழக்குகள்  ஜவகர் மீது காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளன. 

போலீசில் இருந்து தலைமறைவாக இருந்த ஜவகர் இன்று இரவு வீட்டின் அருகே ரத்த வெள்ளத்தில் சடலமாக இருப்பதை கண்ட அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொன்னேரி போலீசார் தடயங்களை சேகரித்து விசாரணையில் ஈடுபட்டனர். 

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார். ஜவகர் உடலில் அரிவாளால்  வெட்டுக் காயங்களும், கத்தியால் குத்தப்பட்டும் கொடூரமாக கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

இதனையடுத்து சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொலையான ஜவகர் கஞ்சா விற்பனை செய்து வந்த நிலையில் கஞ்சா விற்பனையில் ஏற்பட்ட போட்டியால் கொலை செய்யபட்டரா   அல்லது அதே பகுதியில் ரவுடிகளில் யார் பெரியவர் என்ற தொழில் போட்டியில் கொலை நடந்ததா என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

கடந்த மாதம் 26ஆம் தேதி ஜவகர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கஞ்சா மற்றும் நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த ஜவகரை தேடி வந்த நிலையில் இந்த கொலை சம்பவம் நடந்து உள்ளது இது போலீசாரின் மத்தியில் பெரும் அதிர்சசியை ஏற்படுத்தி உள்ளது 

 

Tags :

Share via