நடிகர் திலீப்பால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பிரபல நடிகை கேரள முதலமைச்சரை சந்தித்து உதவி கோரினார்
நடிகர் திலீப்பால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பிரபல தமிழ் மற்றும் மலையாள பட நடிகை கேரள முதல் அமைச்சர் பினராயி விஜயனை சந்தித்து முறையிட்டார். தற்போது 35 வயதான அந்த நடிகை 2017 ஆம் ஆண்டு நடிகர் திலீப்பால் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக போலீசார் வழக்கு பதிவு செய்து கொச்சி உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பினராயி விஜயனை 15 நிமிடங்களில் சந்தித்து தமது நிலைமையை விளக்கி நடிகைக்கு அரசு உதவும் என்று பினராயி விஜயன் உறுதியளித்துள்ளதாக நடிகை தெரிவித்துள்ளார். தொடர்ந்து காவல்துறை ஆணையரை அழைத்து பினராய் விஜயன் நடிகைக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் உதவிகளை செய்து தருமாறு உத்தரவிட்டார்.
Tags :