முனைவர் பட்டம் பெறுவதில் தொடர்ந்து தமிழ்நாடு முதலிடம்..
இந்திய அளவில் தொடர்ந்து 2020 - 2021 ஆம் கல்வி ஆண்டில் பல்வேறு பட்டபடிப்புக்களில் தமிழகத்தில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் முனைவர் (PhD) பட்டம் பெற்றுள்ளனர். அகில இந்திய உயர் கல்வி இயக்கம் நடத்திய கணக்கெடுப்பில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி 2020 - 21 ஆம் ஆண்டில் மட்டும் தமிழ் நாட்டைச் சேர்ந்த 3,206 பேர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். இதில் 1,493 பேர் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 2217 பேருடன் உத்தரப் பிரதேசம் இரண்டாம் இடத்தில் உள்ளது.இந்தையாவில் அதிகளவில் உயர்கல்வி பெறுவதில் 49 சதவீதம் பேர் தமிழ் நாட்டை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :