ராமதாஸ் வீட்டுக்கு முன்பு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

by Editor / 30-05-2025 09:52:22am
ராமதாஸ் வீட்டுக்கு முன்பு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் வீட்டுக்கு முன்பு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 4 காவல்துறையினர் முதற்கட்டமாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் அன்புமணியின் வீட்டிலும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ராமதாஸ் - அன்புமணி ராமதாஸ் இடையே கருத்து முரண் ஏற்பட்டுள்ள நிலையில், இன்று (மே 30) அன்புமணி தலைமையில் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. பாதுகாப்பு கருதி காவல்துறையினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.

 

Tags : ராமதாஸ் வீட்டுக்கு முன்பு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

Share via