ஊரடங்கு காலத்தில் 3 வேளையும் இலவச உணவு வழங்க அம்மா உணவகத்துக்கு எம்எல்ஏ நிதி உதவி

by Editor / 11-05-2021 09:57:52am
ஊரடங்கு காலத்தில் 3 வேளையும் இலவச உணவு வழங்க அம்மா உணவகத்துக்கு எம்எல்ஏ நிதி உதவி

கும்பகோணம் நகராட்சி சார்பில் தஞ்சாவூர் சாலையில் அம்மா உணவகம் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு காலையில் சிற்றுண்டி, மதியம் தயிர், சாம்பார், எலுமிச்சை, புளி சாதம் மலிவு விலையில் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், ஊரடங்கின் போது பொதுமக்கள் இங்கு இலவசமாக உணவு உட்கொள் ளும் விதமாக காலை, இரவு சிற்றுண்டியும், மதியம் இரண்டு வகை உணவும் வழங்கத் தேவையான நிதியை கும்ப கோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன் நகராட்சியில் செலுத்தியுள்ளார்.

இதையடுத்து, கும்பகோணம் அம்மா உணவகத்தில் நேற்று மதியம் பொதுமக்களுக்கு இலவ சமாக உணவு வழங்குவதை எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்ப ழகன் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில், கும்பகோணம் நகராட்சி ஆணையர் லட்சுமி, திமுக கும்பகோணம் நகரச் செயலாளர் சு.ப.தமிழழகன், கூட்டணி கட்சி நிர்வாகிகள் டி.ஆர்.லோகநாதன், சின்னை பாண்டியன், செந்தில், செல்வம், நகர திமுக துணைச் செயலாளர் எஸ்.ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

Tags :

Share via