எலி பேஸ்ட் தனிநபர்களுக்கு விற்கக் கூடாது என கடைகளுக்கு அறிவுறுத்தல்

by Editor / 12-09-2022 04:41:46pm
எலி பேஸ்ட் தனிநபர்களுக்கு விற்கக் கூடாது என கடைகளுக்கு அறிவுறுத்தல்

எலி பேஸ்ட் தனிநபர்களுக்கு விற்கக் கூடாது என அனைத்து கடைகளுக்கும் அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட உள்ளதாக அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மனநல நல்ல ஆதரவு மன்றம் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர் இத்திட்டத்தில் கல்லூரி மாணவர்களுக்கு மன அழுத்தத்தை குறைக்க உதவியாக இருக்கும் என்று சில ஆண்டுகளில் அனைத்து கல்லூரிகளிலும் இத்திட்டம் தொடங்க உள்ளதாகவும் கூறினார்.

 

Tags :

Share via