மே 28ல் புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா

by Staff / 19-05-2023 12:22:01pm
மே 28ல் புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா

புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டிடத்தை மே 28ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா வியாழக்கிழமை மோடியை சந்தித்து புதிய கட்டிடத்தை திறப்பதற்கான அழைப்பை விடுத்ததாக மக்களவை செயலகம் தெரிவித்துள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டடத்தில், லோக்சபா அறையில் 888 உறுப்பினர்களும், ராஜ்யசபா அறையில் 300 உறுப்பினர்களும் அமர முடியும். இரு அவைகளின் கூட்டுக் கூட்டம் நடந்தால், லோக்சபா அறையில் மொத்தம் 1,280 உறுப்பினர்கள் இடம் பெறலாம். டிசம்பர் 10, 2020 அன்று புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

மே 28ல் புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா
 

Tags :

Share via