தாயை சந்தித்து வாழ்த்து பெற்ற யோகி ஆதித்யநாத்
முதலமைச்சராக பதவியேற்ற பின் யோகி ஆதித்யநாத் முதல் முறையாக சொந்த ஊரில் தன் தாயை சந்தித்து ஆசி பெற்றுள்ளார். உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சராக 2017 ஆம் ஆண்டு பதவி ஏற்ற யோகி ஆதித்யநாத் 2022 ஆம் ஆண்டும் தொடர்ந்து இரண்டாவது முறையாக பதவியில் உள்ளார் .பதவிக்கு வந்த பின் முதன்முறையாக குடும்ப விழாவாக அவர் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள சொந்த ஊரான கௌரிக்கு சென்றுள்ளார். 28 ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. தனது தாயின் காலைத்தொட்டு வணங்கி அவரிடம் வாழ்த்து பெற்று படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
Tags :