வேறு சாதி இளைஞரை காதலித்த மகள் கழுத்தை நெரித்து கொன்று எரித்த தந்தை

by Staff / 12-09-2022 11:47:10am
வேறு சாதி இளைஞரை காதலித்த மகள்  கழுத்தை நெரித்து கொன்று எரித்த தந்தை

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ளது ஷாமிலி கிராமம். இந்த கிராமத்தில் உள்ள நிலத்தில் இளம்பெண் ஒருவரின் சடலம் கிடந்துள்ளது. இதையடுத்து, சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை செய்தனர். போலீசார் விசாரணையில் உயிரிழந்தது 18 வயதான இளம்பெண் என்று தெரியவந்தது.

உயிரிழந்த இளம்பெண்ணின் தந்தை பிரமோத்குமார் என்று தெரியவந்தது. இதையடுத்து, 56 வயதான பிரமோத்குமாரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளார். இதையடுத்து, போலீசாருக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.போலீசாரின் விசாரணையில் உயிரிழந்த இளம்பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்து உடலை தீ வைத்து எரித்ததை பிரமோத் ஒப்புக்கொண்டார்.

பிரமோத்குமாரின் 18 வயதான மகள் அதே ஊரைச் சேர்ந்த அஜய் காஷ்யப் என்ற இளைஞரை காதலித்துள்ளார். குடும்பத்தினர் அந்த இளம்பெண்ணை கண்டித்துள்ளனர். ஆனாலும், காதலர்கள் இருவரும் வெளியில் சந்தித்து அடிக்கடி பேசியுள்ளார்.

இந்நிலையில், தனது மகள் வேறு சாதியைச் சேர்ந்த இளைஞரை காதலிப்பதால் ஆத்திரமடைந்த பிரமோத்குமார் தனது மகளை கொலை செய்ய திட்டமிட்டார். இதையடுத்து, கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பு தனது மகளை நிலத்தில் வேலை இருப்பதாக கூறி அழைத்துச் சென்று, மகளின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர், மகளின் உடலை அதே இடத்தில் தீ வைத்து எரித்துள்ளார்.

 

Tags :

Share via