கொடூரமாக கொலை பழங்குடி இளைஞர்
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மறையூரில் பழங்குடியின இளைஞரான பெரியகுடியில் ரமேஷ் (27) என்பவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவரது தலையில் கம்பியால் அடித்தும், வாயில் கம்பியை கொண்டு குத்தியும் உறவினரான சுரேஷ் என்பவர் கொலை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை இரவு 10.30 மணியளவில் நடந்துள்ளது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தகராறு முற்றியதில், இந்த கொலை அரங்கேறியுள்ளதாக கூறப்படுகிறது. அதனை தொடந்து, சம்பவ இடத்தில் இருந்து சுரேஷ் தப்பியோடியுள்ளார்.
Tags :