அதிமுக கூட்டணிக்கு உறுதுணையாக இருப்போம்பாஜக தலைவர் அண்ணாமலை

by Editor / 04-02-2023 03:25:44pm
அதிமுக கூட்டணிக்கு உறுதுணையாக இருப்போம்பாஜக தலைவர் அண்ணாமலை


சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது, ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருக்க வேண்டும் என்று தான் பாஜக உறுதுணையாக இருக்கிறோம். முதலில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பின்னர் பன்னீர்செல்வத்தையும் சந்தித்தோம். கட்சியின் நலனுக்காக வேட்பாளர் நிற்க வேண்டும் என்று தெரிவித்தோம்.


எடப்பாடி நிறுத்தும் வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்று ஓ.பன்னிர்செல்வத்திடம் தெரிவித்தோம். அதற்கு அவர்களும் யோசிப்பதாக கூறினார். சில நிபந்தனைகளும் வைத்தார். இடைத்தேர்தலில் நிச்சயமாக ஒரு வேட்பாளர் நிற்க வேண்டும். அவர் இரட்டை இலை சின்னத்தில் நிற்க வேண்டும். அவர்களுக்கு பாஜக ஆதரவு எப்போதும் உள்ளது.


வேட்பாளர் என்று ஒருவர் அதிமுக நிறுத்தும்போது அது வெற்றி வாய்ப்பு பெற கூடிய வேட்பாளராக இருக்க வேண்டும். உட்கட்சி விவகாரத்தில் நாங்கள் தலை இடுவதில்லை. அவர்கள் நல்ல முடிவை தெரிவிக்க வேண்டும்.  அதிமுக கூட்டணியில் தலையிடுவதற்கு எங்களுக்கு உரிமை கிடையாது. அவர்கள் தொண்டர்கள் தான் அதை முடிவு செய்ய முடியும். இடைத்தேர்தலுக்கு இன்னும் சில நாட்கள் தான் உள்ளது. எனவே இன்று மாலைக்குள் இருவரும் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைப்பதாக அண்ணாமலை கேட்டு கொண்டார்.

மேலும், பாஜக யாருக்கும் எதிரானவர்கள் கிடையாது. இடைத்தேர்தலில் திமுகவிற்கு எதிராக போட்டியிட வேண்டும். அதற்கு அதிமுக கூட்டணிக்கு உறுதுணையாக நாங்கள் இருப்போம் அவர்கள் வெற்றிக்காக பாடுபடுவோம் என்றார்.

 

Tags :

Share via