27, 28ஆம் தேதிகளில் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.

by Editor / 26-02-2023 07:50:47am
27, 28ஆம் தேதிகளில் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.

தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வரும் மார்ச் 1ஆம் தேதி வரை பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். இதில், 27, 28ஆம் தேதிகளில் தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது, மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் தெளிவாக காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

 

Tags :

Share via