1. 80 கோடிக்கு விற்பனை

by Staff / 31-05-2023 04:36:00pm
1. 80 கோடிக்கு விற்பனை

புதுச்சத்திரம் ஒன்றியம் புதன்சந்தையில் வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை மாட்டுச்சந்தை கூடுவது வழக்கம். திங்கட்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை மதியம் வரை நடைபெறும் சந்தையில், மாடுகளை வாங்க விற்க ஆந்திரா, கர்நாடகம், கேரளா, கோயம்புத்தூர். ஈரோடு, நீலகிரி, திண்டுக் கல், சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் மற்றும் உள்ளூர் விவசாயிகள். வியாபாரிகள் வருவார்கள், கோடிக்கணக்கில் வர்த்தகம் நடைபெறும். நேற்று கூடிய சந்தையில் ஆந்திரா, கர்நாடகா, தமிழ் நாட்டின் உள் மாவட்டங்களில் இருந்து மாடுகள் அதிகளவில் விற்பனைக்கு வந்திருந்தது. கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளூர் சுற்றுப்பகுதியில் இருந்து மாடுகள் குறைந்த அளவில் விற்பனைக்கு வந்திருந்தது. மாடுகளை வாங்க வெளி மாநில வியாபாரிகள் அதிக அளவு வராததால் மாடுகளின் விலை குறைந்தது. பல்வேறு பகுதிகளில் மழை நின்று விட்டதால் விற்பனை குறைந்து விட்டது. இதன் காரணமாக மாடுகள் விலை குறைந்துள்ளது.இறைச்சி மாடுகள் 25 ஆயிரத்திற்கும். கறவை மாடுகள் 47 ஆயிரத்திற்கும், கன்று குட்டிகள் 14 ஆயிரத்திற்கு விற்பனை யானது. மொத்தம் 1. 80 கோடிக்கு வரத்தகம் நடைபெற்றது.

 

Tags :

Share via