எந்த விதமான தண்டனை அளித்தாலும் ஏற்க நான் தயாராக இருக்கிறேன்” என்று பிரிஜ் பூஷன் சரண் சிங்

by Staff / 31-05-2023 05:00:36pm
 எந்த விதமான தண்டனை அளித்தாலும் ஏற்க நான் தயாராக இருக்கிறேன்” என்று பிரிஜ் பூஷன் சரண் சிங்

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவரை கைது செய்யக் கோரி மல்யுத்த வீராங்கனைகள் கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி முதல் டெல்லியில் போாரட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தன் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தூக்கிட்டுக் கொள்கிறேன் என்று இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவரும், பாஜக - எம்.பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் கூறியுள்ளார். "மல்யுத்த வீரர்கள் ஏதேனும் ஆதாரம் இருந்தால், அதை நீதிமன்றத்தில் சமர்ப்பியுங்கள். எனக்கு எந்த விதமான தண்டனை அளித்தாலும் ஏற்க நான் தயாராக இருக்கிறேன்” என்று பிரிஜ் பூஷன் சரண் சிங் கூறியுள்ளார்.

 

Tags :

Share via