உத்தரப்பிரதேசத்தில்நிறுத்தப்பட்டிருந்த பஸ்சின் மீது மோதி பஸ் மோதி 7 பேர் பலி

by Editor / 19-07-2021 05:05:51pm
உத்தரப்பிரதேசத்தில்நிறுத்தப்பட்டிருந்த பஸ்சின் மீது மோதி  பஸ் மோதி 7 பேர் பலி

 ஆக்ரா மொராதாபாத் தேசிய நெடுஞ்சாலையில் உத்தரப்பிரதேச மாநிலம் சண்டவுசி என்ற இடத்தின் அருகே 
லகரவன் என்ற கிராமம் அருகே  நடந்த திருமண விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு ஒரு குழுவினர் பஸ்சில் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த பஸ்சின் டயர் பஞ்சர் ஆனதால் சாலையின் ஓரத்தில் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் சிலர் பஸ்சை விட்டு வெளியே இறங்கி சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென அந்த வழியாக வேகமாக வந்த மற்றொரு பஸ் நிறுத்தப்பட்டிருந்த பஸ்சின் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 7 பேர் பலியானார்கள். 8 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து காயமடைந்தவர்களை பஹோஜியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் விர்பால் (வயது 60), ஹப்பு (வயது 35), சோட்டு (வயது 40), ராகேஷ் (வயது 30), அபய் (வயது 18), வினீத் (வயது 30) மற்றும் புர் (வயது 25) ஆகிய 7 பேர் பலியாகி இருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் மற்றொரு பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் மற்றும் கிளீனர் ஆகியோர் தப்பி ஓடிவிட்டனர். அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.இது குறித்து சம்பல் மாவட்ட போலீஸ் சூப்பிரெண்ட் சக்ரேஷ் மிஸ்ரா கூறுகையில், இந்த விபத்தில் 7 பேர் உயிர் இழந்துள்ளனர். 8 பேர் படுகாயம் அடைந்திருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் சப்ரா கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு பஸ்சில் ஊருக்கு திரும்பியபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது என்று தெரிவித்தார்.

 

Tags :

Share via