லிப்டில் சிக்கிய கர்ப்பிணி பெண்.. பரபரப்பு
தெலங்கானா மாநிலத்தில் கர்ப்பிணி பெண் லிப்டில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே மாலக் பேட்டையில் உள்ள பிவிஆர் மால் வளாகத்தில் நேற்று இரவு லிப்ட் திடீரென பழுதாகி நின்றது. இந்த சம்பவத்தில் கர்ப்பிணி பெண் உள்பட 12 பேர் லிப்டில் சிக்கிக் கொண்டனர். இதனையடுத்து, அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் தீயணைப்பு படையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து லிப்டை திறந்தனட்ர். லிப்ட் திடீரென நின்றதால், அதில் இருந்தவர்கள் பீதியடைந்துள்ளனர். மேலும், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Tags :