மனித உரிமை மீறல்கள் அதிகரிப்பு... காவல் நிலையங்கள் குறித்து தலைமை நீதிபதி அதிருப்தி...

by Admin / 09-08-2021 01:05:56pm
மனித உரிமை மீறல்கள் அதிகரிப்பு... காவல் நிலையங்கள் குறித்து தலைமை நீதிபதி அதிருப்தி...

இந்திய காவல் நிலையங்களில் மனித உரிமை மீறல்களுக்கான அச்சுறுத்தல்கள் அதிகரித்திருப்பதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என் வி ரமணா வேதனை தெரிவித்துள்ளார்.

 தேசிய சட்ட சேவைகள் ஆணையம் தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், இந்திய காவல் நிலையங்களில் விசாரணை கைதிகள் சித்திரவதை செய்யப்படுவதாகவும் மனித உரிமை மீறல்கள் நடைபெறுவது சமீப காலமாக அதிகரித்திருப்பதாக தரவுகள் கூறுவதை சுட்டுக்காட்டி கவலை தெரிவித்தார்.

காவல் நிலையங்களில் சட்ட பிரதிநிதித்துவம் பின்பற்றப்படாதது மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாக கூறிய அவர், இந்திய சட்டங்களை பற்றி நன்கு அறிந்தவர்கள் கூட காவல் அதிகாரிகளின் மூன்றாம் நிலை நடத்தையில் இருந்து தப்பிப்பதில்லை எனவும் கூறினார்.

 

Tags :

Share via