விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

by Staff / 07-09-2023 12:36:28pm
விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகே மத்திய அரசின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.. திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு  கி. வீரமணி தலைமை வகித்தார். விஸ்வகர்மா யோஜனா திட்டத்தைக் கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.: தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழகிரிபேசியதாவது:,:  விஸ்வகர்மா யோஜனா திட்டத்தில் சாதியை முன்னிறுத்தி கடன் வழங்குவதில் உள்நோக்கம் புரிகிறது. ஆட்சிக்கு வந்ததில் இருந்து அவர்கள் நினைத்ததை எல்லாம் செய்து முடிக்கின்றனர். எனவே வாக்குகளை மனதில் கொள்ளாமல் கருத்துகளை அச்சமின்றி வெளிப்படுத்த வேண்டும். எதற்கும் அஞ்ச மாட்டோம்.இன்று இந்தியாவின் பெயரை மாற்ற நினைக்கின்றனர்என்றாா்..

திமுக துணை பொதுச்செயலாளர் ஆ. ராசா:  சனாதனமும் விஸ்வகர்மா யோஜனாதிட்டமும் வேறல்ல. தொழிலை பிரிப்பது சமூகத்துக்கு தேவை. ஆனால் , குலத்தொழிலோடு சேர்த்து சாதியாக பிரித்துப்பாா்க்கப்படுகிறது., குல வழி. இவர் மகன் இதைச் செய்ய வேண்டும் என்னும் குலத்தொழிலை ஒழிக்கும் கட்டாய கடமை நமக்குஉண்டு என்று குறிப்பிட்டாா். 

 

Tags :

Share via