தமிழக அரசுக்கு ஒரு வாரம்   அவகாசம்.விதித்த உயர்நீதிமன்றம் 

by Editor / 29-07-2021 02:30:08pm
தமிழக அரசுக்கு ஒரு வாரம்   அவகாசம்.விதித்த உயர்நீதிமன்றம் 

 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட  ரவிச்சந்திரன்.என்பவர்  கடந்த 25 ஆண்டுகளாக மதுரை மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.
இதுவரை  அவருக்கு 3 முறை பரோல் வழங்கப்பட்டுள்ளது. 
இதற்கிடையே, குடும்பபிரச்சனை மற்றும்  தனது தாயாரை பார்க்கவும் ஒரு மாதம் பரோல் கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அவர் மனு தாக்கல் செய்திருந்தார். மனு மீதான விசாரணை நடந்து வந்தது.
 இந்நிலையில் சிறையில் இருக்கும் ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்குவதில் என்ன சிக்கல் உள்ளது ? என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. இது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு ஒரு வார காலம் அவகாசம் அளித்து வழக்கை ஒத்தி வைத்துள்ளது.

 

Tags :

Share via