உடற்பயிற்சி கூடத்தில் இரட்டைக் கொலை

by Staff / 01-09-2023 12:27:33pm
உடற்பயிற்சி கூடத்தில் இரட்டைக் கொலை

சென்னையை அடுத்த கண்ணம்பாளையத்தில் உடற்பயிற்சி கூடத்தில் இரட்டைக் கொலை நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. செப்டம்பர் 1 ஆம் தேதி வெள்ளிக்கிழமை இன்று ஜிம்மில் உடற்பயிற்சி செய்துக் கொண்டிருந்தபோது, விஜய், ஸ்ரீகாந்த் ஆகியோரை மர்ம கும்பல் அரிவாளால் வெட்டியும், கத்தியால் குத்தியும் படுகொலை செய்தனர். மேலும், இந்த தாக்குதலில் படுகாயமடைந்த அஜய் என்பவர் உயிருக்கு போராடி வருகிறார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via