அரை நிர்வாணமாக போராடிய விவசாயிகள்

by Staff / 01-09-2023 12:37:29pm
அரை நிர்வாணமாக போராடிய விவசாயிகள்

காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கும் விவகாரத்தை கண்டித்து கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த விவசாய அமைப்பினர் அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலாண் ஆணைய உத்தரவின் பேரில் காவிரியிலிருந்து விநாடிக்கு 5,000 கன அடி நீர் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 2வது நாளாக கர்நாடக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். முதல்நாள் போராட்டத்தில் அவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி விடிய, விடிய போராட்டம் நடத்தியதினர்கள்.

 

Tags :

Share via