ஆட்சியைப் பிடிக்க அள்ளிவிட்ட வாக்குறுதிகள் - டிடிவி தினகரன் சாடல்
தேர்தலுக்கு முன் அள்ளிவிட்ட வாக்குறுதிகள் ஏராளம் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ட்வீட், 'ஆட்சியைப் பிடிப்பதற்காக ஸ்டாலின் அவர்கள் தேர்தலுக்கு முன் அள்ளிவிட்ட வாக்குறுதிகள் ஏராளம். அவற்றில் பலவற்றை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்..அந்த வரிசையில் வெளிநாட்டில் மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு இந்தியாவில் சேவை செய்வதற்கான எப்எம்ஜி தேர்வை எழுதி, தேர்ச்சி பெற்ற நூற்றுக்கணக்கானோர் அரசு மருத்துவக்கல்லூரிகளில் பயிற்சி மருத்துவராக சேர்வதற்கான வாய்ப்பு இதுவரை வழங்கப்படவில்லை.இதுதொடர்பாக கடந்த ஜுலை மாதம் மருத்துவத்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புக்கு இதுவரை அரசாணை வெளியிடப்படவில்லை. எத்தனையோ வாக்குறுதிகளைப் போல தி.மு.க.வினர் இதனையும் காற்றில் பறக்கவிட்டுவிடுவார்களோ இவ்வாறு ட்விட்டாில் பதிவிட்டுள்ளாா்.
Tags :