பாஜகவில் இருந்து விலகிய பிரமுகர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
பாஜக மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. சரஸ்வதியின் மருமகனும், அக்கட்சியின் மாநில OBC அணியின் துணை தலைவருமான அசோக் குமார், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இன்று அதிமுகவில் இணைந்தார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாஜகவில் இருந்து விலகியதாக தகவல் வெளியானது. ஈரோடு எம்பி தொகுதியை குறிவைத்து அசோக் பல்வேறு பணிகள் செய்து வந்தார். 'ஆற்றல் அசோக் குமார்' என அழைக்கப்படுகிறவர்தான் அசோக். ஆற்றல் என்ற பெயரில் பவுண்டேஷன் ஒன்றை நடத்தி வருகிறார்.
Tags : பாஜகவில் இருந்து விலகிய பிரமுகர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.