ரூ.1.5 கோடி மதிப்பிலான கஞ்சா கடத்திய ஐ.டி. ஊழியர்
சென்னை மடிப்பாக்கத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த போலீசார், அந்த வழியாக ஆட்டோவில் பயணித்த இளைஞரிடம் இருந்து 7 கிலோ உயர் ரக கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, இளைஞரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, அந்த இளைஞர் நங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீனிவாச ராகுல் என்பதும், பெருங்களத்தூரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது. மேலும், பெங்களூரில் இருந்து சென்னைக்கு ரூ.1.5 கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது.
Tags :