ஆஹா மாணவர்களுக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..

by Editor / 27-09-2022 12:18:44pm
ஆஹா மாணவர்களுக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் காலாண்டு தேர்வு நடந்து வருகிறது. தேர்வுகள் முடிந்த பிறகு, காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதன்படி, 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அக்டோபர் 9ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அக்டோபர் 6 - 8ம் தேதி வரை எண்ணும் எழுத்தும் பயிற்சி நடத்தவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அக்டோபர் 12ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தொடக்க கல்வித்துறை அறிவித்துள்ளது. தொடக்கபள்ளி ஆசிரியர்களுக்கான 2-ம் கட்ட எண்ணும், எழுத்தும் பயிற்சி அக்டோபர் 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடப்பதாக விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via