மீண்டும் ரசிகர்களைச்சந்திக்கும் விஜய்

by Admin / 13-12-2022 10:34:50am
மீண்டும் ரசிகர்களைச்சந்திக்கும் விஜய்


பொங்கலுக்கு நடிகர் விஜய் நடித்து வெளிவரவுள்ள வாரிசு படத்தின் வெளியிட்டைத்தொடர்ந்து ,விஜய் தம் மக்கள் இயக்க நிர்வாகிகளை இன்று பனையூரிலுள்ள ரசிகர் மன்றத்தலைமையகத்தில் பகல் 12.00 க்குப்பிறகு சந்திக்க உள்ளார்.கடந்த நவம்பர் மாதம் 20 ஆம் தேதி நாமக்கல்,சேலம்,காஞ்சிபுர நிர்வாகிகளைச்சந்தித்தநிலையில் ,இன்றுஅரியலூர்,பெரம்பலூர்,செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகிகளைச்சந்திக்கிறார் .செல்லிடை பேசியை உள்ளே எடுத்துச்செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதோடு அடையாளஅட்டையுடன் ஆதார் அட்டையையும் எடுத்து வந்து காட்டிய பின்பேஅனுமதிக்கப்படுவதோடு
மன்ற பணியாளர்கள் தவிர மற்றவர்கள் அடையாள அட்டை காட்டிய பின்பே அனுமதிக்கப்படுகிறார்கள்.காவல் துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது .நீலங்கரை வீட்டிலிருந்து விஜய் வந்த பின்பு ஆலோசனைக்கூட்டம் தொடங்கும்.பின்னர் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார் .மன்றத்தினர் களுக்காக பிரியாணி விருந்து தயாராகி வருகின்றது.கடந்த கூட்டத்தின் முடிந்த பின்பு விஜய் வீட்டிற்கு பிரியாணி எடுத்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் ரசிகர்களைச்சந்திக்கும் விஜய்
 

Tags :

Share via