13.05.2022 வெள்ளியன்று உள்ளூர் விடுமுறை தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் க.வீ.முரளிதரன் உத்திரவு:
தேனி மாவட்டம், வீரபாண்டி அருள்மிகு ஶ்ரீ கௌமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு தேனி மாவட்டத்திற்கு 13.05.2022 அன்று சிறப்பு மிக்க தேர்த்திருவிழா நடைபெறும் வெள்ளியன்று உள்ளூர் விடுமுறை வழங்கிட தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் க.வீ.முரளிதரன் உத்தரவிட்டுள்ளார்.
உள்ளூர் விடுமுறையினை ஈடு செய்யும் வகையில் எதிர்வரும் 28.05.2022 சனிக் கிழமையன்று பணி நாளாக செயல்படும் எனவும் தேனி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்
மேலும்,உள்ளூர் விடுமுறை தினத்தில் பனிரெண்டாம் வகுப்பு (+2) பொதுத் தேர்வு வழக்கம் போல நடைபெறும் எனவும்,அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு மாவட்டத்தில் உள்ள கருவூலம்,சார் நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் எனவும் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
Tags : Theni District Administrator KV Muralitharan Order