பாதிரியார் மீண்டும் ஜெயிலில் அடைப்பு.

by Staff / 29-03-2023 12:10:10pm
 பாதிரியார் மீண்டும் ஜெயிலில் அடைப்பு.

கொல்லங்கோடு அருகே சூழால் குடயால்விளையை சேர்ந்தவர் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ. இவர் மீது நர்சிங் மாணவி ஒருவர் அளித்த புகாரின்பேரில் பாதிரியார் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் பாதுகாப்பு கருதி பாளையங்கோட்டை ஜெயிலுக்கு மாற்றப்பட்டார். பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இதையடுத்து அவரது லேப்-டாப் மற்றும் செல்போன் ஆதாரங்களை வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை காவலில் எடுத்து விசாரிக்க சைபர் கிரைம் போலீசார் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். கோர்ட்டு ஒரு நாள் காவல் வழங்கி உத்தரவு பிறப்பித்தது. இதை தொடர்ந்து பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை சைபர் கிரைம் போலீசார் நேற்று போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினார்கள். ஏ. டி. எஸ். பி. ராஜேந்திரன் இன்ஸ்பெக்டர் வசந்தி தலைமையில் போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். லேப்-டாப்பில் இருந்த இளம்பெண்கள் குறித்த விவரங்களையும் கேட்டறிந்தனர். அப்போது அவர் அதில் உள்ள ஒரு பெண்ணை காதலித்ததாகவும் மற்றவர்களுடன் நட்பாகதான் பழகி வந்ததாகவும் கூறினார். இதை தொடர்ந்து போலீசார் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை வீட்டிற்கு அழைத்து சென்றனர். அங்கு தடயங்கள் உள்ளதா? என்பது குறித்து சோதனை நடத்தப்பட்டது. பாதிரியார் பணியாற்றிய தேவாலயத்திற்கு அழைத்துச்சென்றும் விசாரணை மேற்கொண்டதாக தெரிகிறது. விசாரணைக்கு பிறகு பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ சைபர் கிரைம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார். பின்னர் அவரை போலீசார் மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். இதை தொடர்ந்து பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

 

Tags :

Share via