கஞ்சா குடித்த மாப்பிள்ளை.. திருமணத்தை நிறுத்திய மணப்பெண்
உத்தரப்பிரதேச மாநிலம் பதோஹியில் வியாழக்கிழமை அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மணமகன் மது மற்றும் கஞ்சா குடித்ததால் மணப்பெண் திடீரென திருமணத்தை நிறுத்தினார். அதுமட்டுமின்றி திருமணத்திற்கு செலவான ரூ.8 லட்சத்தை திரும்ப தருமாறு மணமகளின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். தவிர, மணமகன் தாசில்தார் கவுதம், அவரது தந்தை ஜெய் பிரகாஷ், தாத்தா மேவாலால் ஆகியோரை மணமகளின் குடும்பத்தினர் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
Tags :