ஐந்தாம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை ஆசிரியர் மீது போலீசில் பெற்றோர் புகார்

by Editor / 24-06-2022 01:04:34pm
ஐந்தாம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை ஆசிரியர் மீது போலீசில் பெற்றோர் புகார்


சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஐந்தாம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரின் பெயரில் தொடர்புடைய ஆசிரியரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.சித்தன்பட்டி  கிராமத்தில் இயங்கி வரும் அரசு தொடக்கப் பள்ளியில் படித்துவரும் ஐந்தாம் வகுப்பு மாணவி நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்றவுடன் நான் இனிமேல் அந்த  பள்ளிக்கு செல்ல மாட்டேன் என அழுதவாறு பெற்றோரிடம் கூறியுள்ளார். விசாரணையில் செந்தாழம் படையைச் சேர்ந்த அகஸ்டின் தங்கையா என்ற பள்ளி ஆசிரியர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக மாணவி கூறியுள்ளார்.

 

Tags :

Share via