சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாணவர் கைது

by Staff / 13-05-2023 12:43:59pm
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாணவர் கைது

மதுரை பசுமலையைச் சேர்ந்த 19 வயதுடைய மாணவர் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். தனது வீட்டின் அருகே வசிக்கும் 8ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை காதலித்து வந்ததாக தெரிகிறது. சிறுமியும், மாணவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளனர். அப்போது மாணவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க அதனை சிறுமி கண்டித்த நிலையில் மாணவரின் தொல்லை அத்துமீறவே தனக்கு நேர்ந்த கொடுமையை சிறுமி பெற்றோரிடம் கூறியுள்ளார். இதைக்கேட்டு பெற்றோர் திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்த நிலையில், மாணவனை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

 

Tags :

Share via