இந்தியா - கனடா வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு

by Staff / 11-10-2023 12:28:32pm
இந்தியா - கனடா வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு

காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப்சிங் நிஜார் கொலையில் இந்தியா மீது கனடா பிரதமர் குற்றம் சுமத்தியதால், இருநாடுகளிடையே பதற்றம் அதிகரித்தது. இந்நிலையில், கனடா வெளியுறவுத் துறை அமைச்சர் மெலனி ஜோலியும், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரும் வாஷிங்டனில் இரண்டு நாட்களுக்கு முன் ரகசிய சந்திப்பு நடத்தியதாக பிரிட்டன் நாளிதழான பைனான்சியல் டைம்ஸ் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், இந்த சந்திப்பை இரு நாட்டு வெளியுறவு அமைச்சகங்களும் உறுதி செய்யவில்லை. மேலும், என்.ஐ.ஏ. தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் உள்ள காலிஸ்தான் தீவிரவாதி சுக்தூல் சிங் சுட்டுக்கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

 

Tags :

Share via