ஐசியுவில் கவலைக்கிடமான நிலையில் அருந்ததி நாயர்

by Staff / 13-04-2024 05:05:56pm
ஐசியுவில் கவலைக்கிடமான நிலையில் அருந்ததி நாயர்

கேரளாவில் சாலை விபத்தில் சிக்கி கடந்த ஒரு மாத காலமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வரும் பிரபல நடிகை அருந்ததி நாயரின் உடல்நிலையில் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மார்ச் 14 ஆம் தேதி முதல அவருக்கு ஐசியுவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது ஒரு நாள் மருத்துவ செலவாக ரூ.2 லட்சம் இருக்கும் நிலையில் அவருக்கு இதுவரை திரைஉலகைச் சேர்ந்த எவரும் முன் வரவில்லை என்று உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

 

Tags :

Share via