ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை  மன்னிக்க மாட்டோம்  புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி

by Editor / 22-05-2021 06:06:36pm
ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை  மன்னிக்க மாட்டோம்  புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி



ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளை நாங்கள் மன்னிக்க மாட்டோம். புதுச்சேரியில் கடுமையான முறையில் ஊரடங்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
 இது குறித்து அவர் கூறியதாவது, 
ராஜீவ் காந்தியைக் கொன்றவர்களுக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்டு ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. தற்போது அவர்கள் சிறையில் இருக்கிறார்கள். அவர்களை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யலாம் என சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் பெருந்தன்மையோடு கூறியுள்ளனர்.
ஆனால், ராஜீவ் காந்தியின் இழப்பு நாட்டிற்கும், காங்கிரஸ் கட்சிக்கும் பேரிழப்பு. அவரைக் கொன்றவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படுகிறது. அது சில அரசியல் கட்சி மற்றும் பொதுநலவாதிகளின் கருத்தாக இருக்கலாம். ஆனால், காங், தொண்டன் என்ற முறையில் தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவித்தாக வேண்டும். அவர்களை நாங்கள் மன்னிக்க மாட்டோம். இது மன்னிக்க முடியாத குற்றம். அவர்கள் நீதிமன்றத் தீர்ப்பை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும்'.
இவ்வாறு நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via