பாலியல் துன்புறுத்தல் வழக்கில் நடிகர் திலீப்பின் மனைவி காவியா மாதவன் ஆஜராக உத்தரவு

by Staff / 13-04-2022 01:15:08pm
பாலியல் துன்புறுத்தல் வழக்கில் நடிகர் திலீப்பின் மனைவி காவியா மாதவன் ஆஜராக உத்தரவு

மலையாள நடிகை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான வழக்கில் நடிகர் திலீப் இன் மனைவி நடிகை காவியா மாதவன் இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு கேரள காவல் துறை உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை ஏப்ரல் 15ஆம் தேதிக்குள் முடிக்குமாறு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து விசாரணை தீவிரம் அடைந்துள்ளது. விசாரணை அதிகாரிகளை தாக்க முயற்சித்ததாக தொடரப்பட்ட இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இவ்வழக்கில் சகோதரர் மற்றும் அவர் மைத்துனர் சுராஜ் ஆகியோரையும்  அலுவாவில் உள்ள காவல்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு குற்றப்பிரிவு போலீசார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

 

Tags :

Share via