ஜவ்வாது மலையில் கோர விபத்து பலர் பலி
திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலைபகுதியில் ஏராளமான மலை கிராமங்கள் உள்ளன.இங்குள்ள மலைக்கிராமங்களில் புதூர் நாடு,புங்கம்பட்டு நாடு, நெல்லிவாசல் நாடு, ஆகிய மூன்று ஊராட்சிகளில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இன்று தெலுங்கு வருடப்பிறப்பு என்பதால் நெல்லிவாசல் நாடு மலை கிராமத்தை சேர்ந்தவர்கள் 30 க்கும் மேற்பட்டோர் சரக்கு வாகனத்தில் அந்தபகுதியிலுள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்றுள்ளனர்.
அப்போது, மலைப்பாதையில் சரக்குவாகனம் பயணிகளை வைத்து இழுத்து செல்லமுடியாமல் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பின்நோக்கிச் சென்று பெரும் பள்ளத்தில் கவிழ்ந்தது.இதில் சுமார் 5க்கும் மேற்ப்பட்டவர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும், 20 க்கும் மேற்பட்ட ஆண்களும்,பெண்களும்,குழந்தைகளும் படுகாயமடைந்தனர்.அங்கு மரண ஓலம் ஒலித்தது. அரைமணி நேரம் போராடிய பிறகு மலைப்பகுதியில் இருந்து சமநிலை பகுதிக்கு வந்த சிலர் 108 ஆம்புலஸ் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் மருத்துவக் குழுவினர் படுகாயமடைந்த 20-க்கும் மேற்பட்டோரை மீட்டு சிகிச்சைக்காகவும்,உயிரிழந்தவர்களை உடற்கூறு பரிசோதனைக்கு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை ஏற்றுக்கொண்டுள்ளனர்.இந்த சம்பவம் அந்த கிராப்பகுதிகளில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags : Many killed in accident at Javadu hill