இரு தரப்பு ஆதரவாளர்களுக்கு இடையே நடைபெற்ற சண்டைக்குப் பிறகு அதிமுக தலைமையகத்தை கைப்பற்றியது ஓபிஎஸ் தரப்பு

by Editor / 11-07-2022 09:05:25am
இரு தரப்பு ஆதரவாளர்களுக்கு இடையே நடைபெற்ற சண்டைக்குப் பிறகு அதிமுக தலைமையகத்தை கைப்பற்றியது ஓபிஎஸ் தரப்பு

அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று காலை 9.15 மணிக்கு வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரி மண்டபத்தில் நடைபெற உள்ளது.இந்த நிலையில் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்தார்.அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ்ஸின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈபிஎஸ் ஆதரவாளர்கள் அலுவலக நுழைவாயிலில் அமர்ந்து போராட்டம் நடத்துவதால் பரபரப்பு.உருவானது.இந்த நிலையில் அங்குள்ள ஈபிஎஸ் பேனர்கள் கிளிக்கப்பட்டன. ஒரு மணி நேரத்திற்கு மேலாக இருதரப்புக்குமிடையே நடந்த சண்டைக்கு பிறகு தற்போது தான் போலீசார் அப்பகுதிக்கு வந்துள்ளனர்.இந்த நிலையில் வானகரத்தில் ஏய்.பி.எஸ்.தரப்பு கூடியதால் ஓபிஎஸ் தரப்புஅதிமுக தலைமை அலுவலகத்தை கைப்பற்றியது.இரு தரப்பு ஆதரவாளர்களுக்கு இடையே நடைபெற்ற சண்டைக்குப் பிறகு தற்போது ஓபிஎஸ் தரப்பு ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்துக்குள் நுழைந்துள்ளது.அதிமுக தலைமை அலுவலகத்தில் எப்பொழுதும் ஜெயலலிதா நின்று கையசைக்கும், அதே இடத்தில் நின்று ஓ பன்னீர்செல்வம் தொண்டர்களுக்கு நன்றிதெரிவித்தார்.
 

 

Tags : The OPS side captured the AIADMK headquarters after a fight between supporters of both sides

Share via