தமிழ் புதல்வன் திட்டம்: அரசு கல்லூரியில் 128 பேருக்கு ஊக்கத்தொகை

by Staff / 13-08-2024 03:42:42pm
தமிழ் புதல்வன் திட்டம்: அரசு கல்லூரியில் 128 பேருக்கு ஊக்கத்தொகை

அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களின் உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு தமிழ் புதல்வன் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அந்த திட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உயர்கல்வி படிக்கும் 128 மாணவர்களுக்கு வங்கி பற்று அட்டைகளை அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி. வெங்கடாசலம் வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் பொன்னுசாமி தலைமை வகித்தார்.

 

Tags :

Share via