பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது.

by Staff / 13-02-2023 01:20:36pm
பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள குட்லாடம்பட்டி தாடகை நாச்சிபுரம் பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி (45) என்ற கூலித் தொழிலாளியான இவர் அதேபகுதியில் ஒரு வீட்டில் குழந்தைகளுடன் வீட்டில் துாங்கிய 28 வயதுடைய பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும்வீட்டிலிருந்த ரூ. 10 ஆயிரத்தையும் திருடிச் சென்று விட்டார்.இதுகுறித்து வாடிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி சின்னத்தம்பியை கைது செய்தனர்.

 

Tags :

Share via