அங்கித் திவாரி வழக்கில் நிபந்தனை தளர்வு

by Staff / 24-05-2024 02:13:23pm
அங்கித் திவாரி வழக்கில் நிபந்தனை தளர்வு

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர் சுரேஷ்பாபுவிடம் ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கடந்த டிசம்பர் 1ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்டார்.கடந்த மார்ச் 22ஆம் தேதி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும் நாள்தோறும் நீதிமன்றத்தின் வேலை நாட்களில் நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து நிபந்தனை தளர்வு கேட்டு நீதிமன்றத்தில் சமீபத்தில் மனு தாக்கல் செய்தனர். இதனை இன்று  விசாரித்த நீதிபதி தினமும் ஆஜராகி கையெழுத்து இட வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்தி வாரம் ஒரு முறை கையெழுத்து இட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

 

Tags :

Share via