அடுத்த வருடம் சேப்பாக்கத்தில் விளையாடுவேன்: தோனி உறுதி

by Editor / 16-10-2021 03:35:03pm
அடுத்த வருடம் சேப்பாக்கத்தில் விளையாடுவேன்: தோனி உறுதி

சென்னை அணியின் கேப்டன் எம்.எஸ். தோனிக்கு 20 ஓவர் கிரிக்கெட்டில் கேப்டனாக 300-வது ஆட்டமாகும். இந்த மைல்கல்லை எட்டிய முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
போட்டியின் முடிவில் எம்.எஸ். தோனி கூறியதாவது:


சென்னையை பற்றி பேசுவதைவிட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியைப் பற்றி பேசுவதுதான் முக்கியமானது. முதல் பாதி ஆட்டங்கள் நடந்து முடிந்த போது 7ஆவது இடத்தில் நீடித்தார்கள். அதன்பிறகு சிறப்பான கம்பேக் கொடுத்து இறுதிப் போட்டிவரை வந்திருக்கிறார்கள். கோப்பை வெல்ல அனைத்து தகுதிகளும் அந்த அணிக்கு இருந்தது. நாங்கள் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடி வந்த நிலையில், முதல் குவாலிஃபையர் முடிந்தப் பிறகு ஓய்வு கிடைத்தது. இதனால், தவறுகளை சரிசெய்ய நேரம் கிடைத்தது.
நாங்கள் தொடர்ந்து மேம்படுத்திக்கொள்ளதான் விரும்புகிறோம்.

இனி வரும் காலங்களிலும் சிஎஸ்கே இதனை பின்பற்றும் என நம்புகிறேன். ரசிகர்கள் அனைவருக்கும் நன்றிகள். அமீரகத்தில் மட்டுமல்ல, தென்னாப்பிரிக்காவில் விளையாடி னாலும்கூட உற்சாக ஆதரவு தந்து சேப்பாக் மைதானம்போல் உணர வைப்பார்கள். அடுத்த வருடம் சேப்பாக்கத்தில் விளையாடுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.

 

Tags :

Share via