கடன் பிரச்சனை மனைவியின் சேலையில் தூக்கில் தொங்கிய தொழிலாளி
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே மருதூர்குறிச்சி பகுதியை சார்ந்தவர் விமல் சிங் கட்டிட தொழிலாளி இவர் அனுஷா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். வீடு வைக்க பலரிடம் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் மன உளைச்சலில் மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். இந்த நிலையில் இரவு தூங்கச் சென்றவர் காலையில் வெகு நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் கதவை உடைத்து பார்த்த போது மனைவியின் பட்டு சேலையை மின்விசிறியில் கட்டி தூக்கு போட்டுள்ளார். இது குறித்து தக்கலை போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீஸ் வந்து உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :