மதுபானங்களை திருடிய 2 பேர் கைது

by Staff / 18-11-2023 04:58:32pm
மதுபானங்களை திருடிய 2 பேர் கைது

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே ஒக்கக்குடியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையில் நவ. 13-ம் தேதி இரவு பூட்டு உடைக்கப்பட்டு, ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான மது பானங்கள் திருடுபோயின. இதுதொடர்பாக, டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் முருகானந்தம் (50) அளித்த புகாரின் பேரில், திருவையாறு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வந்தனர். மேலும், இன்ஸ்பெக்டர் வனிதா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு நடத்தப்பட்ட விசாரணை யில், பட்டுக்கோட்டை மாட்டுசந்தை சாலை பகுதியைச் சேர்ந்த சூர்யா(32), அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தத்தனூர் கோவில் சீமை பகுதியைச் சேர்ந்த விஜயபாஸ்கர்(27) ஆகியோர் இந்த திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. தஞ்சாவூரில் பதுங்கியிருந்த இருவரும் கைது செய்யப்பட்டனர்.
 

 

Tags :

Share via