இயக்குநர் பாரதிராஜா மறைவு: எடப்பாடி பழனிசாமி இரங்கல்
தமிழ் திரைத்துறையை மண்வாசனையால் நிரப்பிய இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு, ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். தென் தமிழகத்தின் கிராமத்திலிருந்து புறப்பட்டு தமிழ் சினிமாவின் கேமராவை கிராமங்களை நோக்கி திருப்பியவர் என்றும், அவரது ‘என் இனிய தமிழ் மக்களே’ என்ற குரல் சினிமா உள்ளவரை நிலைத்து நிற்கும் என்றும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.
Tags :



















