வைகாசி விசாகத் திருவிழா :ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்டி விழிப்புணர்வு.

by Editor / 01-06-2023 10:33:41pm
 வைகாசி விசாகத் திருவிழா :ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்டி விழிப்புணர்வு.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு மாவட்ட காவல் காவல் கண்காணிப்பாளர்  பாலாஜி சரவணன்  உத்தரவின்படி போலீசார் ஒளிரும் ஸ்டிக்கர்கள் (Reflect Sticker) ஒட்டி விழிப்புணர்வு.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  பாலாஜி சரவணன்  மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலைய போலீசாருக்கும் தங்கள் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் திருச்செந்தூர் கோவிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு ஒளிரும் ஸ்டிக்கர்கள் (Reflect Sticker)  ஓட்டியும், சாலை விதிகளை கடைபிடித்தும் பாதுகாப்பான முறையில் பாதயாத்திரை செல்லுமாறு அறிவுறுத்த உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின்படி இன்று (01.06.2023) புதுக்கோட்டை, ஆறுமுகநேரி, முத்தையாபுரம், திருச்செந்தூர் ஆகிய காவல் நிலைய போலீசார் உட்பட பல்வேறு காவல் நிலைய போலீசார் தங்கள் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்டியும் சாலை பாதுகாப்பு குறித்து அறிவுரை வழங்கியும் பாதுகாப்பான முறையில் பாதயாத்திரை செல்லுமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

 வைகாசி விசாகத் திருவிழா :ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்டி விழிப்புணர்வு.
 

Tags :

Share via