கால்பந்து விளையாடிவர் மயங்கி விழுந்து பலி

by Staff / 29-05-2024 01:54:49pm
கால்பந்து விளையாடிவர் மயங்கி விழுந்து பலி

ஈரோடு சூரம்பட்டியில் சுப்ரமணி என்பவர் பத்திரம் எழுதும் வேலை செய்து வருகிறார். தினமும் வீட்டின் அருகே உள்ள மைதானத்தில் கால்பந்து விளையாடி வந்துள்ளார். அதேபோல், இன்றும் (மே 29) காலை வழக்கம்போல் மைதானத்தில் கால்பந்து விளையாடிய சுப்ரமணி திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். உடனே சக வீரர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சுப்பிரமணி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, உடற்கூராய்வுக்குப் பின்னரே இறப்புக்கான காரணம் தெரியும் என மருத்துவர்கள் தெரிவித்தனர் 

 

Tags :

Share via